Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல்

டிசம்பர் 06, 2022 01:01

பெங்களூரு: கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதி யில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தக வல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியது டன், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத் தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் இளைஞரை சுற்று வளைக்கும் கும்பல் ஒன்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது. அந்த கும்பலில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். 

பின்னர் அந்த இளைஞரை தெருவில் இழுத்து வந்து அடித்து துவைப்பதுடன், அவரது தலை யில் கல்லைப் போட்டு அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்யும் காட்சி காண்போரை பதற செய்கிறது. முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பதாமி பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பது தெரிய வந்துள்ளது. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படு கிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீசார், இந்த கொடூர கொலையை செய்தவர்களை தேடி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்